TAIZÉ

உலகில் நம்பிக்கையின் திருப்பயணம்

 

“நமது தினசரி வாழ்வில், நாம் வாழுமிடத்தில்”

பாரிஸ் மாநகரின் 2002 கூட்டத்திற்கு பின்னர், போர்சுகல் நாட்டிலிருந்து ஒர இளைஞர் எழுதினார். “அந்த மாநகரின் நெருக்கடிகழுக்கிடையே தெய்சேவின் உணர்வை அனுபிவிட்டது இயலக் கூடிய காரியம் தான் என்பதை நான் உணர்ந்த போது, பெரும் வியப்படைந்தேன்”. ஆனால் நாங்கள் தெய்சேவில் உணர்ந்த தூய ஆவியை பாரிஸ்-ல், புடாபெஸ்ட்-ல், பர்சேலோனாவில் அல்லது நான் வாழுமிடத்தில் என் தினசரி வாழ்வில் உணர முடியவில்லை. அவரை நாங்கள் தேடியபோதெல்லாம் அவர் அங்கு இருந்தார். எனினும், அந்த ஐந்து நாட்கள், ஒரு அபுத உணர்வை உணராமல் யாராலும் இருக்க இயலாது. என்னை போன்ற 12 இளையோர்களோடு ஒன்றாக ஒரே கூரையில் இருந்தோம். வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தனர் என்பது தான் ஒரே வித்தியாசம். எனினும் ஒன்றாக அமர்ந்து உள்ளத்தை நிரப்பும் அழகான பாடல்களை பாடிக் கொண்டு, இதை தவிர வாழ்க்கைக்கு எதுவும் தேவையில்லை என ஒன்றாக உணர்ந்தது எத்துனை நன்றாக இருந்தது. ஒவ்வொரு நண்பகல் வேளையும் பாரிஸ்-ல் (Paris-Expo) கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளத்தையும், வெவ்வேறு இனம், நிறம், கலாச்சாரம் கொண்டவர்கள் ஒன்றிணைந்த போதும் எந்த பிரச்சனையும் எழவில்லை. என்பதையும உலகம் காண, நான், இந்த 5 நாட்களைப் பற்றி எடுத்துச் சொல்ல விழைகிறேன்.”

தெய்சே குழுமம் பல ஆண்டுகளாக நடத்தி வரம் “உலகில் நம்பிக்கையின் திருப்பயணத்தில், பாரிஸ் கூட்டம் ஒரு கட்டம். தெய்சேவிற்கு வந்து தங்கள் வீடுகளுக்கு சென்றப்பின், தெய்சேவில் தங்கள் கண்டுணர்ந்ததை, எவ்வாறு தொடர்வது என பல இளையோர்கள் கேட்கின்றனர். இளையோர்களின் நகரங்களில், நாடுகளில், பங்குதலங்களில் மற்றும் உள்ளுர் குழுமங்கிளல், அவர்களின் நிலைப்பாட்டை எவ்வாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரிப்பது என்பதுதான் அருட்சகோதரர்களுக்கு முன் நிற்கும் கேள்வி.

JPEG - 13.2 kb

எனினும், ஏற்கனவே தெய்சேவில், இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பரலால், தொiலைவு, இடையூறுகள் அவரது நாட்டை விட்டு வரஇயலாத சூழ்நிலை போன்றவைகளால் தெய்சேவிற்கு வர முடியாமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்பே, 1962லிருந்து தெய்சே அருட்சகோதரர்கள் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளுக்கு பலமுறை சென்றனர். அங்கிருப்பவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர அல்ல, மாறாக பகுத்தறிந்து செயலாற்றியுள்ளனர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள வசதியற்றவர்கள் மற்றும் ஏழைகளிடையே, சிறு குழுமங்களாக, தோழமையில் நமது அருட்சகோதரர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

அக வாழ்வு மற்றும் மனித கூட்டுடொருமை

அக வாழ்வு மற்றும் மனித கூட்டொருமை’ என்ற பொது அம்சத்தின் கீழ், உலகில் நம்பிக்கையின் திருப்பயணமானது பல்வேறு வழிகளில் மக்களை ஒன்ற சேர்க்கிறது. பல வேலைகள் மற்றும் இறுக்கமான வாழ்விற்கும் இடையில், எளிய மற்றும் தியான முறையில், அமைதியில் மற்றும் பல மொழியில் மாற்றம் செய்யப்பட்ட தெய்சே பாடல்களை பாடிக் கொண்டும், ஒன்றிணைந்து செபிக்க வேண்டும் என்ற அவசியத்தை பலரும் உணர்கின்றனர். தெய்சே பாணியில் செபிக்க வேண்டும் என எண்ணற்ற மக்கள் குழுக்கள் வருகின்றன. ஆனால் நம்பிக்கையின் திருப்பயணம் என்பது தெய்சேவை மையமாக கொண்ட இய்க்கமல்ல. முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை போன்று எதுவும் இதில் இல்லை. மொத்தம் எத்தனை குழுக்கள் இதில் உள்ளன என்ற முழு பட்டியலும் யாரிடமும் கிடையாது.

மக்கள் ஒன்றிணைத்து செபிப்பதன் மூலம் அக வாழ்வை ஆழப்படுத்த விழையும் அதே வேளையில் இதை மனித கூட்டொருமை என்ற நடைமுறை செய்கைகளின் வழியாக வெளிப்படுத்த அவர்கள் வழிநடத்தப்படுகின்றனர். “இறைவன் முன் அதியில அமர்ந்திருககும் அதே சமயம், எதிப்பு எழும் போதெல்லாம், சமாதான அதி முயற்சிக்கான வழிகளை மேற்கொள்ள இயலாதா?” அமைதிக்கான தீர்மானத்தை இளையோர்கள் எடுக்கும் போது, அவர்கள் ஒளிரும் நம்பிக்கையின் சாட்சிகளாகின்றனர். அந்த ஒளி எல்லா இடங்களிலும் பரவக் கூடியது. வரலாற்றின் இந்தக் காலக்கட்டத்தில், அன்பு செய்யும் அதை நமது வாழ்வின் மூலம் சொல்லவும், ந்றசெய்தி நம்மை அழைக்கிறது. நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு, விசுவாசம் நம்பகமானதாகிறது. ஆதற்கும் மேலே நாம் வாழும் வாழ்வின் மூலம் அது எடுது்துக் காட்டப்படுகிறது.” (மடல்: அன்பு செய்யும் கடவுள் ரோஜர்)

உலகில் நம்பிக்கை

இந்த பகுதியில், நடக்கவிருக்கின்ற கூட்டங்களை ப்றிறய அறிவிப்புகள் மற்றும் வௌ;வேறு நாடுகளுக்கு சகோதரர்கள் மேற்கொண்ட பயணங்கள், சந்திப்புகள் பற்றிய அறிவிப்புகளை காணலாம். நுடந்த கூட்டங்கள், மற்றும் மினத கூட்டொருஐமயின் நடைமுறை வெளிப்பாடுகள் பற்றிய விபரங்கள்.

அவ்வப்போது, ஐரோப்பாவின் ஏதாவது ஒரு பெரிய நகரில், ஆண்டு இறுதியில் மாபெரும் கூட்டங்கள் நடைப் பெறுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூட்டத்தின் போது அருட்சகோ. ரோஜர் இளையோர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார். ஆந்த மடல் தெய்சேவில் நடந்த கூட்டத்தின் தியான சிந்தனையை மற்றும் வருகின்ற ஆண்டில் வேறெங்காவது நடைபெறவிருக்கும் கூட்டத்தின் தியான சிந்தனையை அடிப்படையை கொண்டதாக அமையும். இந்த ஆண்டு மடல் (தெய்சேவில்) கிடைக்கிறது. தெய்சே மடல்கள் மாதமிருமுறை, 17 மொழிகளி;ல் மொழி மாற்றம் செய்யப்பட்டது. செபங்கள் மற்றும் தியான சிந்தனைகள் ஆகியவைகளுடன் நம்பிக்கையின் திருப்பயணம் பற்றிய செய்திகள் இதில் அடங்கியுள்ளன.

தெய்சேவிலிருந்து மின்னஞ்சல் செய்திகள்: மாதிமிருமுறை தெய்சேவில் என்ன நடக்கிறது, மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது
போன்ற செய்திகள் அனுப்பபடுகிறது. மேலும் அன்றன்றைய தேதி வரையில் உள்ள புதிய தகவல்கள் வரை அதில் தொகுக்கப்படுகிறது.

இறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 10 ஐனவரி 2008

ஹம்பர்க்கில் நடந்த இந்த கூட்டத்தின் இறுதியில் உலகில் நம்பிக்கை திருப்பயணத்தின் இந்த கபடத்தில் இவற்றை நாள்கள் நினைவு கூர்கிறோம்.
உறவு என்பது வாழ்வு அது ஏட்டு உரை அல்ல.
நமது வாழ்வோடு அன்பு செய்வது மற்றும் அதை ஆம் என்று சொல்வது என்பது,
இதயத்தின் நன்மைதனத்தில் அன்பு செய்வது மற்றும் மன்னிப்பது.
இங்கு நர் மகிழ்ச்சியின் நீரூற்றை காண்கிறோம்.

அருட் சகோதரர் ரோஜர்
1 சனவரி 2004
ஹம்பர்க் கூட்டம்

இவற்றையும் பார்க்கவும்: